அழகு நிலைய பெண் உரிமையாளரை வீடியோ எடுத்து கொலை மிரட்டல் – பெண்கள் உள்பட 4 பேர் மீது புகார்..!

கோவை பீளமேடு, மல்லி கிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் கீதா ( வயது 47) இவர் அந்த பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நேற்று இவரது பியூட்டி பார்லருக்கு 3 பெண்களும் ,ஒரு ஆணும் சென்றனர் . அவரிடம் தங்கள் பியூட்டி பார்லரில் தகாத செயல்கள் நடைபெறுவதாக கூறி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து கீதாவை வீடியோ எடுத்து மிரட்டினார்கள். இது குறித்து கீதா பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி சிறப்பு ஷீலா மணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக ரேச்சல், ராஜகுமாரி, செலினா மற்றும் ஒரு ஆண் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..