ஆன்லைன் பணமோசடி வழக்கில் கைதான வாலிபர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

கோவை அருகே உள்ள கோவைபுதூர், சிக்னேச்சர் வில்லா, பரிபூர்ணா எஸ்டேட்டை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விக்னேஷ் ( வயது 31) இவர் தன்னுடைய சுயலாபத்திற்காக மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி தன்னுடைய தொழில் நுட்ப அறிவின் மூலம் அவர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடி மோசடி செய்த குற்றத்திற்காக கோவை மாநகர இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த நபரை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இணையவெளி சட்டக் குற்றவாளி என்று வகைப்படுத்தப்பட்டு கடந்த 07.03.2023 ம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்..