ஓடும் லாரி முன் பாய்ந்து அடையாளம் தெரியாத வாலிபர் தற்கொலை..

கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அருகே நேற்று காந்திபுரம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது .அப்போது 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் திடீரென்று அந்த லாரி முன் பாய்ந்தார். இதில் அவர் லாரி சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. கத்தரிப்பூ கலர் கருப்பு கட்டம் போட்ட பேண்ட் அணிந்து உள்ளார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்துசென்று பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..