கோவை ஓட்டல் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருட்டு..!

கோவை : கரூர் மாவட்டம் ,காமதேனு நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுகுணா பிரபாகரன் (வயது 40) இவரது மகன் இடிகரையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மகனை காரில் கூட்டிக் கொண்டு அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். 45 நிமிடம் கழித்து வந்து பார்த்தபோது கார் சைடு கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த லேப்டாப், சார்ஜர், ஐ.டி. கார்டு ,ஹெட் போன் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர் .இது குறித்து சுகுணா பிரபாகரன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.