கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இன்ஜினியரிங் மாணவர் திடீர் மரணம்..

கோவை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். இவரது மகன் அஜய் குமார் ( வயது 19 )இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ .இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.அங்குள்ள ஜெகதிநகரில் மாணவர் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.இவர் கல்லூரிக்கு ஒழுங்காக செல்வதில்லை. இந்த நிலையை நேற்று திடீர் காய்ச்சல் ஏற்பட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.