கோவையில் கணவர் இறந்த தூக்கம் தாங்காமல் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள பாலப்பட்டி எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.கணவர் நாகராஜ் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.இதிலிருந்து விஜயலட்சுமி ஒழுங்காக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை.இந்த நிலையில் நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார் .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து தம்பி கோவிந்தராஜ் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.