கடைக்குள் தூக்கு போட்டு ஊழியர் தற்கொலை..

கோவை ஐந்து முக்கு பக்கம் சவுடம்மன் கோவில் வீதியில் உள்ள பழைய துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தவர் ராஜேந்திரன் ( வயது 58) இவரது முதல் மனைவி பாக்கியலட்சுமி. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மொத்தம் 5 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று முன் தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லாமல் கடைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சொந்த ஊர் திருச்செந்தூர், சோனங்கண் விளை பக்கம் உள்ள கானம் கஸ்பா கிராமம் ஆகும். குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது முதல் மனைவி பாக்கியலட்சுமி உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.