வடகொரியா மற்றும் சீனாவுடனானபதற்றத்துக்கு மத்தியில் ஜப்பான்-அமெரிக்க படைகள் கூட்டுப்போர் பயிற்சி..!

டகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பானின் தெற்கு பகுதியில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் படைகள் நேற்று மிகப்பெரிய கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின.

இந்த கூட்டுப் பயிற்சி வரும் 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போர் பயிற்சிக்கு ‘கூர்மையான வாள்’ (Keen Sword) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சுமார் 26 ஆயிரம் ஜப்பான் வீரர்களும், 10 ஆயிரம் அதிகமான அமெரிக்க வீரர்களும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.