நகரப் பஸ்களில் ரூ.1000 செலுத்தி சலுகை கட்டண அட்டை பெறலாம் – அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ..!

கோவை: நகரப் பஸ்களில் மாதம் முழுவதும் விருப்பம் போல பயணிக்க ரூ.1,000 செலுத்தி சலுகை கட்டண அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் கோவை கோட்ட மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்து நகர பஸ்களிலும் ஒரு மாதம் முழுவதும் எங்கும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கி பயணிக்க ரூ.1,000 சலுகை கட்டண அட்டையை பிரதி மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். இரவு பஸ் நீங்கலாக அனைத்து நகரப் பஸ்களிலும் (சிவப்பு நிற சொகுசு பஸ்கள் உட்பட) பயணம் செய்யலாம். பிரதி மாதம் 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை சலுகை கட்டண அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம். அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சலுகை கட்டண அட்டையை பெற காந்திபுரம் நகர பஸ் நிலைய அலுவலர்களை 96007 05006, 63697 99902, உக்கடம் பஸ் நிலையத்தை 86959 73859, 8072937875, சிங்காநல்லூர் பஸ் நிலையத்தை 87780 42897, 97883 55577, மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையத்தை 97881 37337, 94420 85091 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.