அரிவாளை காட்டி மிரட்டி கோவை டாக்டரிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ் – பைக் ஆசாமிகள் கைவரிசை.!!

கோவை அருகே உள்ள மசக்காளிபாளையம், ராம் லட்சுமணன் நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சியாம் குமார் (வயது 32) இவர் பீளமேட்டில் உள்ள பி. எஸ் .ஜி . மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் 9 மணி அளவில் இவர் கொடிசியா மைதானத்தில் தனது ஸ்கூட்டருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டனர் .அவர் இல்லை என்றார். இதனால் அவர்கள் கூகுள் பே மூலம் பணம் அனுப்புமாறு மிரட்டினார்கள்.. அதற்கு டாக்டர் ரூ 20 ஆயிரம் அனுப்பினார். பின்னர் அவரது செல்போனை ஒரு ஆசாமி பிடுங்கி பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக் கொண்டான். பின்னர் அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் டாக்டர் சியாம்குமார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 50 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.