11 மாத குழந்தையுடன் இளம்தாய் எங்கோ மாயம்..!!

கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோண வாய்க்கால் பாளையம், கருப்பராயன் கோவில் விதியைச் சேர்ந்தவர் ராஜா. பிகாம் பட்டதாரி இவரது மனைவி கௌசல்யா (வயது 23) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு 11 மாதத்தில் அஜித் எனற மகன் உள்ளான். சம்பவத்தன்று கௌசல்யா தனது மகனை அடித்தார். இதை அவரது கணவர் ராஜா கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யா தனது 11 மாத குழந்தை அஜித்துடன் கோபிசெட்டிபாளையத்தில்உள்ள பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.அங்கும் செல்லவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கணவர் ராஜா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.