இந்து முன்னணி நிர்வாகி கார் கண்ணாடி உடைத்த வழக்கில் 2 பேர் கைது..!

கோவை : மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ் ( வயது 21) இவர் மேட்டுப்பாளையம் நகர இந்து முன்னனி இளைஞர் அணி தலைவராக உள்ளார். கடந்த 25 ஆம் தேதி இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை யாரோ உடைத்து சேதபடுத்திவிட்டனர் .இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி மேட்டுப்பாளையம் மகாதேவபுரம், நாடார் காலனியை சேர்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் ( வயது 24.) மேட்டுப்பாளையம், தொண்டையூர், காமராஜ் நகர் ராதாகிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (வயது 25) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களில் தமிழ் செல்வன் இந்து முன்னணி உறுப்பினராக உள்ளார்.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.