கோவையில் 3 குழந்தைகளின் இளம்தாய் கள்ளகாதலனுடன் ஓட்டம்..!

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த இளம்பெண்
தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்தார். அந்த இளம்பெண் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தனது 2 – வது
குழந்தையை அழைத்து கொண்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வெகு நேரமாகி
அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் இதுகுறித்து
ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தனது மகள் செல்போனில் அடிக்கடி யாரிடமோ பேசி வந்தார். அவருடன் கள்ளகாதல் இருந்து வந்தது. எனவே அந்த வாலிபருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என
தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான 3 குழந்தைகளின் தாய் மற்றும் அவரது 2-வது குழந்தையை தேடி வருகின்றனர்.