கோவையில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த தொழிலாளி கைது

கோவையில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த தொழிலாளி கைது

கோவை ஒத்தக்கால்மண்டபம் ஒக்கிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). கூலி தொழிலாளியான இவரது வீட்டு அருகே கஞ்சா செடி வாசம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில், செட்டிபாளையம் போலீசார் முத்துப்பாண்டி வீட்டின் அருகே சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுமார் 5 அடிக்கு மேல் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை அங்கிருந்து பறிமுதல் செய்த போலீசார், முத்துப்பாண்டியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளின் எடை 1.6 கிலோ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.