கோவை ரெஸ்டாரண்ட் பாரில் மோதல் : மது குடிக்க சென்ற 2 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை,சங்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 30)கலெக்ஷன் ஏஜெண்டாக உள்ளார்.இவரும் அவர் ஆவராம்பாளைத்தை சேர்ந்த இவரது நண்பர் மனோஜ் (வயது 30) என்பவரும் என்பவரும் இடிக்கரையில் உள்ள ஒரு தனியார் ரெஸ்டாரன்டில் உள்ள பாரில் மது குடிக்க சென்றனர்.அப்போது உணவு சப்ளை செய்வது தொடர்பாக பார் ஊழியர்களுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த பார் ஊழியர்கள்,கைகளாலும் இரும்புத்தடியாலும் ரமேஷ் குமார் ,மனோ ஆகியோரை தாக்கினார்கள். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் .இது குறித்து ரமேஷ்குமார் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பார் ஊழியர்கள் மனோஜ் குமார் ( வயது 23) ஆனந்தராஜ் ( வயது 27) ஆகியோரை கைது செய்தார்.