தேனீ எடுக்க மரத்தில் ஏறிய தொழிலாளி 15 அடி உயரத்தில் இருந்து வழுக்கி விழுந்து பரிதாப பலி..

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள விராலியூர் ,மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் பத்ரன் என்ற பெரியசாமி (வயது 37).கூலி தொழிலாளி.இவரது மனைவி ராமாத்தாள் இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது . 2 மகன்கள் உள்ளனர். பத்ரன் நேற்று நரசிபுரத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தேனி எடுப்பதற்காக ஏறினார். அப்போது 15 அடி உயரத்தில் இருந்து திடிரென்று கால் வழுக்கி கீழே விழுந்தார் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பத்ரன் இறந்தார்.இது குறித்து அவரது மனைவி ராமாத்தாள் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.