ஆசனூர் அருகே சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்த காட்டு யானை… வாகன ஓட்டிகள் அச்சம்.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே  ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் நடமாடியதோடு சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் நடமாடிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனத்தில் செல்வோர் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை உபயோகிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.