நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வாலிபர் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாப பலி..

கோவை அருகே உள்ள பி .என். புதூரை சேர்ந்தவர் நஞ்சுண்டன் இவரது மகன் விஷாக் ( வயது 24) இவர் நேற்று தனது நண்பர்களுடன் ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசாட்டிற்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது விஷாக்கிற்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர் .அதற்குள் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தடாகம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .போலீசார் வரைந்து சென்று பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர் .நண்பர்களுடன்சுற்றுலா சென்ற போது நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.