கோவை அருகே வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி வாலிபர் சாவு..

கோவை அருகே வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி வாலிபர் சாவு.. கோவை தடாகம் அருகே வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் இன்று காலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த சுக சூர்யா என்பது தெரியவந்தது.
வனப்பகுதிக்குள் சென்ற இவரை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த வாலிபரின் கழுத்து, வலது கை ஆகிய இடங்களில் சிறுத்தை தாக்கியதற்கான தடயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.