லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் கொள்ளை – கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது..! 

கோவை அருகே லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் கொள்ளை – கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது..!  புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்கடை பக்கம் உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா .இவரது மகன் சுரேஷ் ( வயது 29) இவர் கடந்த 10 ஆண்டுகளாக போத்தனூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று வெள்ளலூர் மாகாளியம்மன் கோவில் அருகேமணல் இறக்கிவிட்டு லாரி ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் இவரை வழி அரிவாளை காட்டிலாரியை வழிமறித்தனர் பின்னர் அவரிடம் இருந்த 1000 ரூபாயை பறித்தனர். அப்போது அவர் சத்தம் போட்டார் .இதைக் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்களை அரிவாளை காட்டி மிரட்டி விட்டு 3பேரும் தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்து போத்தனூர் போலீஸ் சுரேஷ்போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளலூர் தேனிஸ்வரர் கோவில் வீதியை சேர்ந்த தீபக் என்ற விவேக் (வயது 27)ராமநாதபுரம், மருதாச்சலதேவர்
வீதியை சேர்ந்த முத்தரசு ( வயது 19) கணேசபுரம் சரவணன் என்ற ஹரிபிரியன் ( வயது 17) ஆகியோரை கைது செய்தனர் . இவர்களின் தீபக் என்ற விவேக் மெக்கானிக்கல் வேலை பார்த்து வந்தார் .இவர் மீது இதற்கு முன் ஏராளமான வழக்குகள் உள்ளன இதே போல முத்தரசு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .சரவணன் என்ற ஹரிப்பிரியன் பிகாம் படித்து வருகிறார்..