பைக் மீது கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி..

கோவை: ராமநாதபுரம் மாவட்டம்,கஜரன்குடி, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் தேவப்பெருமாள். இவரது மகன் மாரிமுத்து (வயது 25) இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் தொட்டிபாளையம்- கருப்பராயன் பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜே .எஸ். ஆர். சூப்பர் மார்க்கெட் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் மாரிமுத்து படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார் ஓட்டி வந்த சிங்காநல்லூர் ஹவுசிங் போர்டுயை சேர்ந்த ராமசாமி ( வயது 53) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.