வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அபுகலாம் ஆசாத் வீதியை டெசித்தா மேரி (வயது 70) இவர் நேற்று தனது மகன் பிலே ரோவுடன் ஆழியாரறில் உள்ள அறிவு திருக்கோவிலுக்கு நேற்று சென்றார் . பின்னர் இரவில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள் , பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.