கர்ப்பமாக இருந்த கல்லூரி மாணவி திடீர் மரணம்..!

கோவை :  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோழிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் வித்யா ( வயது 21 ) இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். இவருக்கு நேற்று திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். விசாரணையில் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து தாயார் மல்லிகா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..