வீட்டின் முன் நிறுத்திய கார் திருட்டு

வீட்டின் முன் நிறுத்திய கார் திருட்டு. கோவை ஜன1 கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் ( வயது 49) மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் .இவர் அவரது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார் .மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை, யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பிரான்சிஸ் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.