தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் சிக்கி பரிதாப பலி..

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மங்களக் கரை புதூரை சேர்ந்தவர் சரவணகுமார் ( வயது 43 )இவருக்கு திருமணம் ஆகி பூர்ணிமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று இவர் காரமடை சத்யா நகர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் .அப்போதும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ரெயில் சரவணக்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரவண குமார் அதே இடத்தில் பலியானார் .இது குறித்து மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..