கோவை சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் – ஒருவர் கைது..!

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார்.அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் சாலமோன். இவர்கள் இருவரும் நேற்று செல்வபுரம் 60 அடி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது இந்திரா நகரை சேர்ந்த அபி ரகுமான் (வயது 38) என்பவர் அங்கு நின்று கொண்டு தகராறு செய்தார். அவரை கண்டித்தனர் .இதில் ஆத்திரம் அடைந்த அபி ரகுமான் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரை தாக்கி கீழே பிடித்து தள்ளினார். இதில் அவருக்கு காயம்ஏற்பட்டது.  இதை தடுத்த ஏட்டு சாலமோனை மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது . சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அபிப் ரகுமானை கைது செய்தார். இவர் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல் தாக்குதல் உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..