வேப்ப மரத்தில் தூக்கு போட்டு காவலாளி தற்கொலை..

கோவை பீளமேடு பகுதியில் வசிப்பவர் பழனியப்பன் ( வயது 60) இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து காவலாளியாக நிலைய வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை .இந்த நிலையில் பீளமேடு எல்லை தோட்டம் பகுதியில் உள்ள காலி இடத்தில் வேப்ப மரத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.