தங்கையை கிண்டல் செய்த வாலிபர் நடுரோட்டில் கல்லால் தாக்கி படுகொலை – அண்ணன் உட்பட 8 பேர் கைது..!

கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் பிரதீஷ் (வயது 18) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நவீன் ( வயது 18) ) கடந்த 18-ந் தேதி நவீன் தங்கை அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக பிரதீஷ் வீட்டு முன் நடந்து சென்றார். அவரை பிரதிஷ் கேலி -கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை தனது அண்ணன் நவீனிடம் அந்தப் பெண் கூறினார்..இதனால் ஆத்திரமடைந்த நவீன் தனது நண்பர்களை கூட்டிச்சென்று பிரதிஷை கல்லால் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த பிரதீஷ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து பிரதீஸ் தாயார் பரிமளா சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து நவீன் (வயது 18) நண்பர்கள் பிரபாகரன் ( வயது 21) முத்து பாரதி ( வயது 18) கார்த்திக் குமார் ( வயது 19 ) ரங்கநாதன் ( வயது 21) கோபி (வயது 22 ) சஞ்சய் (வயது 21) ஆகியோரை நேற்று கைது செய்தார். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..