தங்க வியாபாரம் செய்து வந்த தம்பதி திடீர் மாயம்-மகன் போலீசில் புகார்..!

கோவை செட்டி வீதி சாவித்திரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 64) இவரது மனைவி தனலட்சுமி (வயது 54) இவர்கள் இருவரும் தங்க நகை வியாபாரம் செய்து வந்தனர். இதற்காக பலரிடம் தங்கம் மற்றும் பணம் வாங்கி இருந்தனர். அந்த பணத்தை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி ஸ்ரீதரும் அவரது மனைவி தனலட்சுமி வீட்டிலிருந்து எங்கோ மாயமாகி விட்டனர். இது குறித்து அவரது மகன் அருண்குமார் கடைவீதி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து தம்பதியை தேடி வருகிறார்.