விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி திடீர் மாயம்

கோவை : மதுரை ‘பாக்கியநாதபுரம், தியாகி ராமசாமி நகரை சேர்ந்தவர் நம்பிராஜ். இவரது மகள் ஹரினி ( வயது 17 ) இவர் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார் . நேற்று விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி ஹரினியை தேடி வருகிறார்கள்.