செமஸ்டர் பணத்தை தொலைத்து விட்டதால்… கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..

கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம், வையாபுரி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் . இவரது மகள் பிரிசில்லா ( வயது 23 )கோவையில்  உள்ள ஒரு கல்லூரியில் முதுநிலை பட்ட மேற் படிப்பு படித்து வருகிறார் .இவர் கல்லூரிக்கு கட்ட வேண்டிய செமஸ்டர் கட்டணம் ரூ 40 ஆயிரத்தை தொலைத்துவிட்டார். இதை இவரதுதாயார் கண்டித்தார் .இதனால் மனம் உடைந்த பிரிசில்லா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஆனந்தராஜ் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..