கோவை கோவிலின் பூட்டை உடைத்து திருடிய ஆசாமி கைது..!

கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒரு கோவிலில் துணிகர திருட்டு நடந்துள்ளது .யாரோ மர்ம ஆசாமி இரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பூஜை பொருட்கள் , சாமி நகைகள் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி கந்தசாமி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பக்கம் உள்ள சிறுகலூரை சேர்ந்த விக்னேஷ் ( வயது 24) என்பவரை நேற்று கைது செய்தனர். திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டது.