கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் வாணிஸ்ரீ ( வயது 19 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அருண் என்ற வாலிபருடன் காதல் வைத்து இருந்தாராம். இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற வாணிஸ்ரீ வீடு திரும்பவில்லை..அவரது பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில் தன் காதலன் அருணுடன் சென்னை சென்றிருப்பதாகவும், தன்னை தேட வேண்டாம் என்று கூறியிருந்தார் .இது குறித்து அவரது தந்தை சரவணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply