டாஸ்மாக் கடை முன் சமையல்காரருக்கு பீர் பாட்டில் குத்து – 2 பேர் கைது..!

கோவை: வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அகமத் ((வயது 43) குனியமுத்தூர் பகுதியில் சமையல் வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடை முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவருடன் வேலை பார்க்கும் சமையல்காரர்களான பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ் ( வயது 43) மயிலாடுதுறை சேர்ந்த கிரி (வயது 53) ஆகியோர் அங்கு வந்தனர்.இவர்கள் இருவரும் குடிபோதையில் அகமதுவிடம் தகராறு செய்தனர் பின்னர் அவரை பீர்பாட்டிலால் முகத்தில் குத்தினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து தாஸ், கிரி ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல் தாக்குதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..