கோவையில் ஒரே நாளில் 3 பெண்கள் தற்கொலை..

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தின பாண்டியன், இவரது மகள் பிரியா ( வயது 27) இவருக்கு ராஜ்குமார் என்பவருடன் 7 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரியா நேற்று அவரது வீட்டில் சாணி பவுடர் கரைத்து குடித்து மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார் .இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

இதேபோல சிங்காநல்லூர் எஸ். ஐ. எச். எஸ் காலனி, அண்ணா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் .இவரது மனைவி லட்சுமி ( வயது 26) இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகள் உள்ளார் . இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக லட்சுமி நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சின்ன வேடபட்டி பக்கமுள்ள உடையாம்பாளையம் .கந்தசாமி நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் இவரது மனைவி கலைச்செல்வி ( வயது 41 ) இவரது மூத்த மகன் 28- 5 -23 அன்று இறந்து விட்டார். இதனால் மன அழுத்தத்துடன் இருந்து வந்த கலைச்செல்வி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது கணவர் குழந்தைவேல் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..