ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு – 2 பேர் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர், ஆசாத் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேன்மொழி (வயது 33) இவர் கடந்த 20 ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அவரது 3.5 பவுன் தங்க நகையை ஒரு பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் இருந்த தங்க நகையை நைசாக திருடிவிட்டனர். இது குறித்து தேன்மொழி அன்னூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணிடம் நகை திருடியது மேட்டுப்பாளையம், பாரதி நகரை சேர்ந்த ஜெய்தூன் ( வயது 60) நடூரை சேர்ந்த அப்பாஸ் (வயது 45 ) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது..