அக்கா மகளை திருமணம் செய்ய முடியாததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் ( வயது 27 ) கூலித் தொழிலாளி .இவர் பொள்ளாச்சி குஞ்சு பாளையம் பிரிவு -ஜமீன் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மிச்சர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்..இவர் தனது அக்கா மகளை திருமணம் செய்ய விரும்பினார். அவரால் முடியவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஈஸ்வரன் அவர் தங்கி இருந்த அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.