கோவை அவினாசி சாலையில் திடீரென பற்றி எரிந்த கார் – நடந்தது என்ன..?

கோவை மாவட்டம் பீளமேடு பகுதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று. இங்கு கார்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருக்கும். நேற்றிரவு இரவு சுமார் 11 மணி அளவில் ஹோப் கல்லூரி அருகே நின்று கொண்டு இருந்த காரின் முன் பக்கம் தீ பிடித்தது. காரின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவி மளமளவென எரியத் தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாக கார் முழுவதும் தீ பரவியது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் தீ மேற்கொண்டு மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் எலக்ட்ரிக் சர்க்யூட் ஏதேனும் தீ பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று பற்றி எரிந்தது . அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.