சூலூர் பி.ஏ.பி வாய்க்காலில் குளிக்க சென்ற வடமாநில வாலிபர் பலி..!

சூலூர்: உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் உபாத்தாயா (வயது 20). இவர் செஞ்சேரி பிரிவு அருகே தங்கி இருந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று பெயிண்டிங் வேலை முடித்து பிரின்ஸ் உபாத்தாயாவும், அவரது நண்பரும் செஞ்சேரி பிரிவில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் குளிக்க சென்றனர். அப்போது பிரின்ஸ் உபாத்தாயா திடீரென தவறி வாய்க்காலில் விழுந்தார். அப்போது அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் பிரின்ஸ் உபாத்தாயாவின் உடலை மீட்டு கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.