கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 5 பேரிடம் என்.ஐ.ஏ விசாரணை..!

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடித்தது .இதில் அதே பகுதியை ஜமேஷாமு பின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகம்மது ரியாஸ் பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் .கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபின் அவரது கூட்டாளிகளுடன் நெருக்கமாக இருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐ.எஸ். ஆதரவு எண்ணம் கொண்டவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் .இது தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த வாரம் ஒரே நேரத்தில் 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது .இந்த சோதனையில் செல்போன் கம்ப்யூட்டர், ஐ.எஸ். ஆதரவு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். கார் வெடிப்பில் பலியான ஜமீசாவுடன் போனில் தொடர்பு இருந்தவர்கள் உட்பட 5 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். அவர்களுக்கும் கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. அதன் முடிவில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளனர். இதற்கிடையில் ஏற்கனவே கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.