கார் மோதி 94 வயது முதியவர் பரிதாப பலி..

கோவை ஆர். எஸ். புரம் கிழக்கு ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மருதாச்சலம் ( வயது 94 ) இவர் நேற்று ,டி.பி .ரோடு- ராமலிங்கம் ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு கார் இவர்மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் மருதாச்சலம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் . அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விபத்து ஏற்படுத்தி விட்டு மாயமான காரை தேடி வருகிறார்கள்.