ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் 5 பவுன் செயின் திருட்டு..!

கோவை பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சித்ரா ( வயது 55) இவர் நேற்று பி.என் .புதூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ரயில் நிலையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். உப்பிலிபாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவரது கழுத்தில் கடந்த 5 பவுன் செயினை காணவில்லை. யாரோ பஸ்சில் வைத்து திருடிவிட்டனர். இதுகுறித்து சித்ரா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.