கோவையில் குடல் சரிந்த நிலையில் வாலிபர் சடலம்- கொலையா? போலீசார் தீவிர விசாரணை..!

கோவை கணபதி மாநகர் எப்.சி.ஐ ரோடு அருகே 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்த அந்த வாலிபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் எனது விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்ததால் அவரை யாராவது கொலை செய்து அங்கு வீசியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை கொலை செய்திருந்தால் அந்த மர்ம நபர் யார் எதற்காக அவரை கொலை செய்து சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்