கோவை ஓட்டலில் மில் அதிபர் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், பணம் கொள்ளை..!

கோவை: நாமக்கல், எஸ்.பி.ரோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன் ( வயது 34 ) இவர் நாமக்கல்லில் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் மில் நடத்தி வருகிறார் .இவர் நேற்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது “ஸ்கோடா ” காரில் வந்திருந்தார் .காரை ஓட்டல் வளாகத்தில் நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். கூட்டம் முடிந்து வந்து பார்த்தபோது காரின் இடதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த லேப்டாப் ,பணம் ரூ 60 ஆயிரம், பாஸ்போர்ட் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ரவீந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.