விற்பனையாளரை தாக்கி 5 டி.வி,பணம் கொள்ளை-போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது..!

கோவை அருகே உள்ள மசக்ககாளிபாளையம், வரதராஜபுரத்தில் உள்ள கம்பன் நகரை சேர்ந்தவர் தாசிம் ( வயது 26) இவர் டி.வி, கேஸ் ஸ்டவ், விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் சூலூர் கண்ணம் பாளையம் பகுதியில் ஒரு டி.வியை விற்பனைக்காக கொண்டு சென்றார் .அப்போது அங்கு வந்தசூலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வரும் முருகன் (வயது 34) ஆம்புலன்ஸ் டிரைவர் பிரதீஸ் (வயது 27)உட்பட 3 பேர் இவரை வழிமறித்தனர் . போலியான,திருட்டு டிவியை எடுத்து செல்கிறாயா? என்று கூறி அடித்து, மிரட்டினார்கள்.. பின்னர்அவரை காரில் அழைத்து வந்து கம்பன் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்த 5 டி.வி., கேஸ் ஸ்டவ், பணம் ரூ. 47, ஆயிரம் ஆகியவற்றை மிரட்டி பறித்து விட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து விற்பனையாளர் தாசிம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்கு பதிவு செய்து சூலூர் கண்ணம்பாளையம் ரங்கநாதபுரத்தில் வசித்து வரும் போலீஸ்காரர் முருகன் ( வயது 34) பள்ளபாளையம் ,இந்திரா நகரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ( பிரதீஸ் 27) ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள் .கொலை மிரட்டல் , கொள்ளை உட்பட 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.