2 மாணவிகளிடம் சில்மிஷம் – போக்சோவில் காவலாளி கைது.!!

கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள நாகம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி ( வயது 62) காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது மாணவிகள் 2 பேரை ஆசை வார்த்தை காட்டி அழைத்து சில்மிஷம் செய்தாராம் . இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.இது குறித்து அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து காவலாளி ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.