கோவையில் 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்..!

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி( வயது 31 )வீட்டு வேலை செய்து வந்தார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் .இவர்களுக்கு ஹரிஷ் (வயது 10) ஹர்சன் (வயது 7) ஆகிய 2 மகன்கள்உள்ளனர். நேற்று முன்தினம் வேணுகோபால் வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது மனைவியையும் 2 மகன்களையும் காணவில்லை . செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேணுகோபால் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரி அவரது 2 மகன்களை தேடி வருகிறார்.