செக்யூரிட்டி அலுவலகம் முன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு -போலீசார் விசாரணை..!

கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் முன் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர் யார் ?என்று விசாரணை நடந்து வருகிறது.