பூங்காவில் விளையாடிய 7ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து திடீர் மரணம்..

கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர். ஷாஜகான். இவரது மகன் சல்மான் பரிஷ் (வயது 13)அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியில் உள்ள பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தான். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து தந்தை ஷாஜகான் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.