திருப்பதியில் சிக்கியது 6 வது சிறுத்தை – பக்தர்கள் உஷாராக இருக்க அட்வைஸ்.!!

திருப்பதி மலை பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. சமீப காலமாக, திருமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு, சிறுத்தை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

அதனால், சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி மலை பகுதியில் இன்று மேலும் ஒரு சிறுத்தை பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது, பிடிபட்ட சிறுத்தை வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை, 5 சிறுத்தைகள் சிக்கியுள்ள நிலையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியதால் பக்தர்கள் பீதிஅடைந்துள்ளனர்.